2009-02-14 15:34:30

இலங்கையில் துன்புறும் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கு இந்தியா தலையிட இந்திய கத்தோலிக்கக் குருக்கள் கழகம் வேண்டுகோள்


14பிப்.2009. அண்டை நாடான இலங்கையில் துன்புறும் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கு இந்தியா தலையிடுமாறு இந்திய கத்தோலிக்கக் குருக்கள் கழகம் வேண்டுகோள்விடுத்தது.

இந்தியாவின் ஜனநாயகம் உயர்ந்த நன்னெறி கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதால் உலகின் பலபகுதிகளில் இடம் பெறும் இனப்படுக் கொலைகளைப் பார்த்து அந்நாடு மௌனம் காக்க முடியாது என்று இந்திய மறைமாவட்ட குருக்கள் கழகம் கூறியது.

இலங்கையில் அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து இக்கழகத்தினர் தங்கள் வேதனைகளையும் தெரிவித்தனர்.

இந்திய கத்தோலிக்கக் குருக்கள் கழகம், அந்நாட்டிலுள்ள 160 கத்தோலிக்கக் மறைமாவட்டங்களில் 128 இலத்தீன்ரீதி மறைமாவட்ட குருக்கள் அமைப்பாகும்.

 








All the contents on this site are copyrighted ©.