போர்த்துக்கல் நாட்டுக்குச் செல்ல திருத்தந்தை விருப்பம் .120209 .
திருத்தந்தை போர்த்துக்கல் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள விரும்புவதாகக் கூறுகிறார்
அந்நாட்டுக்கான வத்திக்கான் தூதர். போர்த்துக்கல் நாட்டின் வத்திக்கான் தூதராக பேராயர்
ரீனோ பாசிகாத்தோ சென்ற நவம்பர் மாதம் நியமனம் பெற்றார் . போர்த்துக்கல் நாட்டின் தொலைக்காட்சிக்கு
இப்புதனன்று பேட்டி அளித்த பேராயர் ரீனோ திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் போர்த்துக்கல்
நாட்டுக்கு திருப்பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்ததாகக் தெரிவித்துள்ளார். தேதிகள்
குறிப்பிடப்படவில்லை என்றாலும் புனித மரியன்னை காட்சி கொடுத்த நாட்டுக்கு வருவதற்கு திருத்தந்தை
தம் ஆர்வத்தைத் தெரிவித்ததாக போர்த்துக்கல் நாட்டின் வத்திக்கான் தூதர் பேராயர் ரீனோ
தெரிவித்தார் . போர்த்துக்கல் நாடும் வத்திக்கானும் 2004 ஆம் ஆண்டு உடன்படிக்கை ஒன்றில்
கையொப்பம் இட்டுள்ளன . அதில் இரு நாடுகளும் திருமணம் , வழிபாடு , அரசு அமைப்பு போன்ற
பல முக்கியமான திட்டங்களில் பங்கேற்றுள்ளன. 80 விழுக்காடு மக்கள் கத்தோலிக்கர்களாக வாழும்
போர்த்துக்கல் நாட்டில் கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்
எனவும் பேராயர் ரீனோ தெரிவித்துள்ளார் .