2009-02-09 15:01:44

மடகாஸ்கர் நாட்டு அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு அந்நாட்டு கிறிஸ்தவ சபைகள் அழைப்பு


09பிப்.2009. மடகாஸ்கர் நாட்டு இவ்விரு அரசியல் தலைவர்களும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு அந்நாட்டு ஆயர்களும் திருப்பீடத் தூதரும், பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளும் அழைப்புவிடுத்துள்ளனர்.

ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் புல்ஜென்ஸ் ரபேமஹபாலி, எதிர்க்கட்சித் தலைவர் ரஜோலினாவை நேரிடையாகச் சந்தித்து உரையாடலின் பாதையைத் தேர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இன்னும், ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூனும், மடகாஸ்கர் நாட்டு அரசியல் தலைவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை அமைதியான வழிகளில் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.