2009-02-06 17:28:50

வெனீசுலா நாட்டின் வத்திக்கான் தூதரகம் மீண்டும் தாக்கப்பட்டது.0602.


வெனீசுலா நாட்டின் வத்திக்கான் தூதரகம் மீண்டும் தாக்கப்பட்டுள்ளது . முக்கிய யூதத் தொழுகைக் கூடமும் சூறையாடப்பட்டுள்ளது . மூன்று கண்ணீர்புகைக் குண்டுகள் காரகாசில் உள்ள அப்போஸ்தலிக்கத் தூதரகத்தில் தற்பொழுது வீசப்பட்டுள்ளது . 15 நாட்களுக்குள் இது இரண்டாவது முறையாக நடக்கிறது . காரகாசின் அப்போஸ்தலிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் வந்தவர்கள் வீசிய குண்டுகள் தூதரகத்துக்கு வெளியேயும் உள்ளேயும் விழுந்ததாகத் தெரிவி்க்கப்பட்டுள்ளது . வியன்னா ஒப்பந்தப்படி தூதரகத்துக்குப் பாதுகாப்புத் தருமாறு அங்குள்ள அரசிடம் கூறப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.