அமெரிக்காவின் சிக்காகோப் பேராலயத்தில் தீ .050209 .
அமெரிக்காவின் சிக்காகோப் பேராலயத்தில் இந்தப் புதன் காலையில் தீப்பற்றிக்கொண்டது .இயேசுவின்
திருநாமப் பேராலயப் பீடத்தின் மேற்கூரையில் தீப்பற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது . அதிகாலை
5 மணி்க்கு வந்த ஒருவர் தீ மூண்டிருப்பதைப் பார்த்துவிட்டு உடனடியாக அணைப்பதற்குத் தேவையான
அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதால் தீ காலை 7.30 மணிக்கெல்லாம் அணைக்கப்பட்டது . இந்த
ஆலயத்தின் கூரையில் பழுது நீக்கும் பணி சென்ற ஆண்டு பிப்ரவரியிலிருந்து ஆகஸ்ட் மாதம்
வரை மேற்கொள்ளப்பட்டிருந்தது . இதே பேராலயத்தில் 1871 ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டு
1875 இல் மீண்டும் கட்டப்பட்டது . தற்சமயம் வழிபாடுகள் அருகில் உள்ள மக்கள் மன்றத்தில்
நடக்கவுள்ளதாக ஆலயத்தின் பொறுப்பாளர் தந்தை தாமஸ் மல்குரோன் தெரிவித்துள்ளார். இதுபற்றிக்
கருத்துக்கூறிய சிக்காகோவின் கர்தினால் மீண்டும் பேராலயம் விரைவில் இயங்கத் தொடங்கும்
எனக் கூறியுள்ளார் .