பிப்ரவரி 5 புனித ஆகத்தம்மாள் திருவிழா . கன்னி , மறைசாட்சி – கி.பி. 251 .
இவர்
இத்தாலியின் பாலெர்மோ , கட்டோனியாவின் பாதுகாவலி . இவர் இறந்த ஓராண்டில் எட்னா எரிமலையில்
தோன்றிய நெருப்பு ஆறு இவரிடம் எழுப்பிய மன்றாட்டால் நீங்கியது . இதன் பொருட்டு இன்றுவரை
நெருப்பிலிருந்து பாதுகாப்புப் பெற இவரது உதவி நாடப்படுகிறது . எட்னா எரிமலை உருகித்
தப்பிழம்புகள் சீறி வெளிவரும்போதெல்லாம் இன்றும் கட்டோனியா மக்கள் ஆகத்தம்மாள் பயன்படுத்திய
தலையில் மூடும் துணியை மக்கள் பார்வைக்கு வைத்து வணக்கத்துடன் செபிக்கின்றனர் .