2009-01-31 20:16:04

வழிபாட்டு ஆண்டின் 4 ஆம் ஞாயிறு . நற்செய்தி வாசகம் .மாற்கு 1,21-28.


தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல் . மாற்கு 1, 21- 28 .



அவர்கள் கப்பர்நகூம் ஊரில் நுழைந்தார்கள் . ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார் . அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள் . ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி , அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார் . அப்போது அவர்களுடைய தொழுகைக் கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார் . அவரைப் பிடித்திருந்த ஆவி, “நாசரேத்து இயேசுவே , உமக்கு இங்கு என்ன வேலை ? . எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? . நீர் யார் என எனக்குத் தெரியும் . நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” , என்று கத்தியது . “வாயை மூடு . இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார் . அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று . அவர்கள் அனைவரும் திகைப்புற்று , “இது என்ன? , இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாக இருக்கிறதே! . இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக் கொண்டனர் . அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது .

 








All the contents on this site are copyrighted ©.