இவ்வார நிகழ்ச்சி பற்றி தந்தை பெடரிக்கோ லொம்பார்டி. 3001
ஜெர்மனியின் விஷவாயுச் சிறைகள் தீமைகளின் சக்தியைக் காட்டுவதாகக் கூறுகிறார் வத்திக்கான்
திருப்பீடத் தகவல் தொடர்பாளர் தந்தை லொம்பாடி .
ஆஸ்ட்விச் விஷவாயுச் சிறையில்
இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தனர் நாசி்க் கட்சியினர் . அது பற்றி திருத்தந்தை
அவரது புதன் மறை போதகத்தில் கருத்து வழங்கியிருந்தார் . அங்கு 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதற்கு
திருத்தந்தை வன்மையாகக் கண்டனம் தெரிவித்தார் . இவ்வார நிகழ்ச்சிகள் பற்றிக்கூற வந்த
தந்தை பெடரிக்கோ லொம்பாடி நம்முடைய விசுவாசம் இப்படிப்பட்ட தீமைகளால் சோதிக்கப் படுவதாக
தெரிவித்தார் . இந்தச் சூழலில் கடவுள் அமைதிகாப்பதாக, மறைந்து விட்டதாகத் தெரிகிறது .
இதற்கு விடை கடவுள் திருமகனாகிய இயேசுவே சிலுவைச் சாவை ஏற்றுக் கொண்ட மறை உண்மைதான் என
தந்தை லொம்பாடி கூறினார் . இந்த மறைபொருளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தந்தை லொம்பாடி
அறிவுறுத்தினார் . ஆஸ்ட்விச் சாவு நடக்கவில்லை எனக் கூறுபவர்கள் கடவுளின் மறை உண்மைகளையோ
, கிறிஸ்துவின் சிலுவையையோ அறியாதவர்கள் என மேலும் அவர் கூறியுள்ளார் .