2009-01-30 17:16:43

இவ்வார நிகழ்ச்சி பற்றி தந்தை பெடரிக்கோ லொம்பார்டி. 3001


ஜெர்மனியின் விஷவாயுச் சிறைகள் தீமைகளின் சக்தியைக் காட்டுவதாகக் கூறுகிறார் வத்திக்கான் திருப்பீடத் தகவல் தொடர்பாளர் தந்தை லொம்பாடி .

ஆஸ்ட்விச் விஷவாயுச் சிறையில் இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தனர் நாசி்க் கட்சியினர் . அது பற்றி திருத்தந்தை அவரது புதன் மறை போதகத்தில் கருத்து வழங்கியிருந்தார் . அங்கு 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதற்கு திருத்தந்தை வன்மையாகக் கண்டனம் தெரிவித்தார் . இவ்வார நிகழ்ச்சிகள் பற்றிக்கூற வந்த தந்தை பெடரிக்கோ லொம்பாடி நம்முடைய விசுவாசம் இப்படிப்பட்ட தீமைகளால் சோதிக்கப் படுவதாக தெரிவித்தார் . இந்தச் சூழலில் கடவுள் அமைதிகாப்பதாக, மறைந்து விட்டதாகத் தெரிகிறது . இதற்கு விடை கடவுள் திருமகனாகிய இயேசுவே சிலுவைச் சாவை ஏற்றுக் கொண்ட மறை உண்மைதான் என தந்தை லொம்பாடி கூறினார் . இந்த மறைபொருளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தந்தை லொம்பாடி அறிவுறுத்தினார் . ஆஸ்ட்விச் சாவு நடக்கவில்லை எனக் கூறுபவர்கள் கடவுளின் மறை உண்மைகளையோ , கிறிஸ்துவின் சிலுவையையோ அறியாதவர்கள் என மேலும் அவர் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.