2009-01-29 08:57:59

ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாண மறைமாவட்ட உண்ணாவிரதம்


இலங்கையின் வன்னி பகுதியில் ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாண ஆயரும் அம்மறைமாவட்டக் குருக்களும் உண்ணாவிரதத்தைத் துவக்கியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பேராலயத்தில் இப்புதனன்று துவங்கிய இந்த அறவழிப்போராட்டம் ஒருவர் மாற்றி ஒருவர் என சுழற்சி முறையில் தொடர்கிறது.

வன்னி பகுதி மீதான தொடர் குண்டு வீச்சுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என யாழ்ப்பாணத் தலத்திருச்சபை ஏற்கனவே பலமுறை அழைப்புவிடுத்துள்ளதற்கும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் அப்பகுதி ஏனைய மத அமைப்புகளும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.