அமைதியை நிலை நாட்டுவதற்காக போலந்து நாட்டினர் புனித பூமியில் சிறிய அடையாளத் திருப்பீடம்
ஒன்றை அமைக்கவுள்ளனர் . போலந்து நாட்டின் அமைதியின் இராக்கினியின் குழுவினர் இந்த வாரப்
புதன் மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தைச் சந்தித்தனர் . அவர்களிடம் பேசிய திருத்தந்தை
இந்த அமைதியின் பீடம் புனித பூமிக்கும் , உலகு அனைத்துக்கும் தொடர்ந்து மன்றாடுவதற்காக
அமைந்திருக்கும் என்றார் . அமைதிக்கான மக்களின் மன்றாட்டுக்களுக்குக் கடவுள் அருள்புரியுமாறு
செபித்தார் . கொண்டுவரப்பட்ட அந்தப் பீடத்தை திருத்தந்தை அர்ச்சித்தார் . அப்பீடம் எருசலேத்தில்
உள்ள ஆர்மீனியன் ஆலயத்தில் வைக்கப்பட உள்ளது .