யூ ட்யூப்பில் வத்திக்கானின் புது முயற்சிகள் குறித்து திருத்தந்தை.
26ஜன.2009. இன்னும் யு டியூப் இணையத்தள வலைஅமைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வத்திக்கான்
தொடங்கிய புதிய முயற்சி பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, தங்களின் ஆன்மீகத் தேடலுக்கான
பதிலை இன்னும் தேடிக் கொண்டிருப்போருக்கு இவ்விணையதள செய்திகள் உதவும் என்று தான் நம்பவதாகவும்
அறிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உலக சமூகத்தொடர்பு தினத்திற்கான
தனது செய்தி பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, அச்செய்தி, இன்டர்னெட் செய்திகளை மிகப்பெரிய
அளவுக்கு, குறிப்பாக இக்காலத்திய கணனி தலைமுறைகளுக்கு முக்கியத்துவம் பெற்றதாக அமைத்துள்ள
புதிய தொழிற்நுட்பங்கள் குறித்த திருச்சபையின் அக்கறையைக் கொண்டுள்ளது என்றார்.
சமூகத்தொடர்பு
தொழிற்நுட்பங்களை ஞானத்தோடு பயன்படுத்தும் போது அவை, உண்மை, நன்மைத்தனம், இனப்பாகுபாடுகளையும்
எல்லைகளையும் தாண்டிய மேலான அழகு ஆகியவற்றுக்கான தேடலை ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை,
எனவே திருப்பீடம் பற்றிய தகவல்கள் எளிதில் கிடைப்பதற்கு உதவும் நோக்கத்தில் இணையத்தளத்தில்
செய்திப் பகிர்வு முயற்சியில் வத்திக்கான் இறங்கியுள்ளது என்றார் அவர்.