ஜனவரி 27 புனித மெர்சி ஆஞ்சலா விழா. 1474ல் பிறந்த இவர், பாவிகள் மனந்திரும்புமாறு கடும்
தவமுயற்சிகளைச் செய்து வந்தார். இதற்கு வெகுமதியாக வானதூதர்களையும் புனிதர்களையும் கண்டு
பேசும் பேறு பெற்றார்.
ஜனவரி 27 நற்செய்தி மாற்கு 3,31-35
அப்பொழுது
இயேசுவுடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ' அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும்
வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ' என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப்
பார்த்து, ' என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச்
சுற்றிலும் பார்த்து, ' இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை
நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ' என்றார்