இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம்
வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட
அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;. அவர்களுக்குத் திருத்தூதர் என்றும்
பெயரிட்டார். அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,
செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் இடியைப் போன்றோர்
எனப் பொருள்படும் பொவனேர்க்கேசு என்று அவர் பெயரிட்டார். அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு,
மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக்
காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.