2009-01-20 15:35:51

காசா பகுதியைச் சீரமைப்பதற்கு கோடிக்கணக்கான டாலர் தேவைப்படும், ஐ.நா


ஜன.20,2009. இஸ்ரேல் நடத்திய மூன்று வார இராணுவத் தாக்குதல்களால் சேதமடைந்துள்ள காசா பகுதியைச் சீரமைப்பதற்கு கோடிக்கணக்கான டாலர் தேவைப்படும் என்று ஐ.நா.எச்சரித்தது.

காசாவில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்துள்ளனர் மற்றும் நான்கு இலட்சம் பேருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் ஐ.நா.எச்சரித்தது.

இந்த மூன்றுவாரத் தாக்குதல்களில் குறைந்தது 1300 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 5500 பேர் காயமடைந்தனர் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் என்று பிபிசி கூறியது.

ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலில் குண்டுகளை வீசியதை நிறுத்துவதற்கென இஸ்ரேல் கடந்த டிசம்பர் 27ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேலும் ஹமாஸிம் போர் நிறுத்தத்தை அறிவித்தன.

 








All the contents on this site are copyrighted ©.