ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே
வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ' பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை
ஏன் இவர்கள் செய்கிறார்கள்? ' என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், ' தாமும் தம்முடன்
இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே
இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத்
தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும்
கொடுத்தார் அல்லவா? ' என்றார். மேலும் அவர் அவர்களை நோக்கி, ' ஓய்வுநாள் மனிதருக்காக
உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட
மகனுக்குக் கட்டுப்பட்டதே ' என்றார்