2009-01-17 11:38:40

டில்லி உயர்மறைமாவட்டத்திற்கு துணை ஆயர், திருப்பீட கலாச்சார அவையின் உறுப்பினர் நியமனங்கள்


ஜன.17,2009. டில்லி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக அருட்திரு ப்ராங்கோ முலக்கல் அவர்களை இன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

1964ம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர், அம்மாநிலத்திலும் நாக்பூரிலும் படிப்புகளை முடித்து ஜலந்தர் மறைமாவட்டத்திற்கென 1990ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

உரோமையில் நன்னெறியியலில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 2001 முதல் 2008 வரை ஜலந்தர் தூய திரித்துவ மாகாண குருத்துவ கல்லூரியில் நன்னெறியியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

2008, ஜூலை முதல் உரோம் அப்போஸ்தலிக்க குருத்துவ கழகம் மற்றும் திருப்பீட பல்சமய உரையாடல் அவையில் ஆலோசகராகப் பணியைத் தொடர்ந்தார்.

மேலும், திருப்பீட கலாச்சார அவையின் உறுப்பினராக ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ, இன்னும் அவ்வவையின் செயலராக இறைவார்த்தை சபையின் அருட்திரு செபஸ்தியான் மரிய மிக்கேல் உட்பட பலரை நியமித்துள்ளார் திருத்தந்தை. அருட்திரு செபஸ்தியான் மரிய மிக்கேல், மும்பை, அந்தேரி இந்திய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனர் ஆவார்







All the contents on this site are copyrighted ©.