2009-01-17 20:35:40

காஜாப் பகுதியிலிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தையின் உதவி.170109.


திருத்தந்தை துயருறுவோர்க்காக மறுபடியும் தம் அன்பைக் காட்டுகிறார் . முக்கியமாக காஜாப் பகுதியில் துயருறும் கிறிஸ்தவர்களுக்கு உதவிகளை அனுப்பியுள்ளார் . காஜாப்பகுதியில் பணி செய்யும் குருக்களுக்கும் , அன்னை தெரசாவின் பிறரன்புச் சகோதரிகளுக்கும் , அங்கு துயருறும் மக்களுக்குத் தொண்டு புரிந்து வரும் பிற துறவற சபையினருக்கும் திருத்தந்தை உதவிகளை அனுப்பியுள்ளார் . திருத்தந்தை பல முறை காஜாப்பகுதியில் துன்புறும் மக்களுக்குத் தம்முடைய பாசத்தை வெளிபடுத்தியிருக்கிறார் . அங்கு நடக்கும் சண்டை மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது எனத் திருத்தந்தை கூறியிருக்கிறார் . திருத்தந்தை தம் பாசத்தை செயலளவில் காட்ட அங்குள்ள சிறிதளவு , ஆனால் பக்தியான கிறிஸ்தவர்களுக்கு கோர் ஊனும் – ஒரே உள்ளம் எனப் பொருள் படும் வத்திக்கானின் தொண்டு அமைப்பின் வழியாக நன்கொடையை அனுப்பியுள்ளதாக இவ்வமைப்புக் கூறியுள்ளது .








All the contents on this site are copyrighted ©.