திருத்தந்தை துயருறுவோர்க்காக மறுபடியும் தம் அன்பைக் காட்டுகிறார் . முக்கியமாக காஜாப்
பகுதியில் துயருறும் கிறிஸ்தவர்களுக்கு உதவிகளை அனுப்பியுள்ளார் . காஜாப்பகுதியில் பணி
செய்யும் குருக்களுக்கும் , அன்னை தெரசாவின் பிறரன்புச் சகோதரிகளுக்கும் , அங்கு துயருறும்
மக்களுக்குத் தொண்டு புரிந்து வரும் பிற துறவற சபையினருக்கும் திருத்தந்தை உதவிகளை அனுப்பியுள்ளார்
. திருத்தந்தை பல முறை காஜாப்பகுதியில் துன்புறும் மக்களுக்குத் தம்முடைய பாசத்தை வெளிபடுத்தியிருக்கிறார்
. அங்கு நடக்கும் சண்டை மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது எனத் திருத்தந்தை கூறியிருக்கிறார்
. திருத்தந்தை தம் பாசத்தை செயலளவில் காட்ட அங்குள்ள சிறிதளவு , ஆனால் பக்தியான கிறிஸ்தவர்களுக்கு
கோர் ஊனும் – ஒரே உள்ளம் எனப் பொருள் படும் வத்திக்கானின் தொண்டு அமைப்பின் வழியாக நன்கொடையை
அனுப்பியுள்ளதாக இவ்வமைப்புக் கூறியுள்ளது .