தமிழ் வளர்த்த அறிஞர்கள் 9 பேருக்கு திருவள்ளுவர் தின விழாவை ஒட்டி
தமிழக அரசு
சிறப்புப்பரிசு . 160109 .
தமிழ் வளர்த்த அறிஞர்கள் 9 பேருக்கு திருவள்ளுவர் தின விழாவை ஒட்டி தமிழக அரசு சிறப்புப்பரிசு
கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது . இதில் சென்னை இலொயோலாக் கல்லூரியில் தமிழ்த்துறையில்
37 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர் ச.பா. அருளானந்தம் அவர்களும் ஒருவர் . பல நல்ல தரமான
நூல்களை தமிழ் உலகுக்குத் தந்த செம்மல் .சென்னையில் வீரமாமுனிவர் பெயரில் ஆராய்ச்சிக்கழகம்
நடத்தி வருகிறார். ஏழை மற்றும் விழியிழந்த மாணவர்களுக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டுகளையும்
பாராட்டி தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவருக்குத் தங்கப்பதக்கத்தோடு , ஓர் இலட்ச
ரூபாய்க்கான காசோலையையும் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளார் . பேராசிரியர் எழுதியுள்ள
நூற்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படுபவை தமிழ் இனிது , தமிழ் எளிது , தமிழ் அமுது , தமிழ்
உணர்வு , தமிழ் உயர்வு ஆகியவையாகும் .
இயேசுசபை கல்வி நிறுவனங்களில் கற்ற பேராசிரியர்
அருளானந்தம் தம்முடைய கல்வியைத் தொடர்ந்து பயிலவும் , தம் நூற்களை வெளியிடவும் இயேசு
சபையினர் புரிந்த உதவிகளை நன்றி உணர்வோடு என்றும் நினைவுகூறும் பாங்குடையவர்