2009-01-16 18:45:28

தமிழ் வளர்த்த அறிஞர்கள் 9 பேருக்கு திருவள்ளுவர் தின விழாவை ஒட்டி

தமிழக அரசு சிறப்புப்பரிசு . 160109 .


தமிழ் வளர்த்த அறிஞர்கள் 9 பேருக்கு திருவள்ளுவர் தின விழாவை ஒட்டி தமிழக அரசு சிறப்புப்பரிசு கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது . இதில் சென்னை இலொயோலாக் கல்லூரியில் தமிழ்த்துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர் ச.பா. அருளானந்தம் அவர்களும் ஒருவர் . பல நல்ல தரமான நூல்களை தமிழ் உலகுக்குத் தந்த செம்மல் .சென்னையில் வீரமாமுனிவர் பெயரில் ஆராய்ச்சிக்கழகம் நடத்தி வருகிறார். ஏழை மற்றும் விழியிழந்த மாணவர்களுக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டுகளையும் பாராட்டி தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவருக்குத் தங்கப்பதக்கத்தோடு , ஓர் இலட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளார் . பேராசிரியர் எழுதியுள்ள நூற்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படுபவை தமிழ் இனிது , தமிழ் எளிது , தமிழ் அமுது , தமிழ் உணர்வு , தமிழ் உயர்வு ஆகியவையாகும் .

இயேசுசபை கல்வி நிறுவனங்களில் கற்ற பேராசிரியர் அருளானந்தம் தம்முடைய கல்வியைத் தொடர்ந்து பயிலவும் , தம் நூற்களை வெளியிடவும் இயேசு சபையினர் புரிந்த உதவிகளை நன்றி உணர்வோடு என்றும் நினைவுகூறும் பாங்குடையவர்







All the contents on this site are copyrighted ©.