2009-01-16 20:39:07

அற்புதக் காட்சிகள் பற்றி வத்திக்கான் புதிய பார்வை – 160109 .


வத்திக்கான் திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாடுகளுக்கான ஆணையகம் புனிதர்களைப் போன்று தரிசனக் காட்சி காண்பதாகக் கூறுவதையும் , சிறப்பாக கிறிஸ்துவையும் அன்னை மரியாவையும் காட்சியில் காண்பதாகக் கூறுவதையும் , இறைவாக்கு வந்ததாகக் கூறுவதையும் , இயேசுவைப்போல ஐந்து காயங்களைப் பெற்றுள்ளதாகக் கூறுவதையும் , சுரூபங்கள் அழுவதாகவும் , அதேபோல இயேசுவின் திரு உடல் பற்றி திரு அப்பம் சம்பந்தப்பட்ட புதுமைகள் நடந்ததாகக் கூறப்படுவதையும் கவனமாகக் கூர்ந்து ஆராய்ந்து மெய்யறிவு பெற இப்பொழுது நடைமுறையில் இருக்கும் ஒழுங்குகளை சரிபார்த்து புதிய சட்டங்களைக் கொண்டுவரத் திருத்தந்தை திட்டமி்ட்டுள்ளதாக வத்திக்கானின் விசுவாசக் கோட்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது . 1978 இல் அமலுக்கு வந்த ஒழுங்குகளை தற்காலத்துக்கு உகந்ததாக புதிய கண்ணோட்டத்தோடு செயல்படுவதற்கு ஏற்ற கையேடு தயாரிப்பதற்குப் பொறுப்பாக இயேசு சபையினைச் சேர்ந்த பேராயர் பிரான்சிஸ்கோ லடாரியா பெரர் நியமி்க்கப்பட்டுள்ளார் . இவர் வத்திக்கானின் விசுவாசக் கோட்பாட்டு ஆணையகத்தின் செயலராக முன்னரே நியமனமானவர் .








All the contents on this site are copyrighted ©.