மெக்சிக்கோவில் நடக்கும் அகில உலகக் குடும்பங்களின் கருத்தரங்கில் கருத்து வழங்குகினார்
பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ .வத்திக்கான் திருப்பீடத்தின் குடியேற்றதாரர்கள் மற்றும்
பயணிகளின் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பேராயர் மார்க்கெட்டோ .
இன்று நண்பகலில்
மெக்சிக்கோவில் பேராயர் மார்க்கெட்டோ குடி பெயரும் குடும்பங்கள் என்ற தலைப்பில் உரை வழங்கினார்
. அகில உலக புலம்பெயர்வோரின் 93 ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்துக்குத் திருத்தந்தை செய்தி
வழங்கியிருந்ததை பேராயர் நினைவு கூர்ந்தார் . குடிபெயரும் குடும்பங்கள் பல சவால்களைச்
சந்திக்க வேண்டுயுள்ளதாகப் பேராயர் தெரிவித்தார் . புதிய நாடுகளில் குடியேறும் போது
அங்கு அவர்களுக்குத் தற்காலிகப் பாதுகாப்பே தரப்படுகிறது . குடும்பங்களை தனியே வி்ட்டுவிட்டுச்
செல்வோரின் குடும்பங்கள் தனிமையில் , வறுமையில் வாடும் சூழ்நிலை உருவாகிறது . குடும்பங்களுக்குப்
பாதுகாப்புத் தேவையுறுகிறது . திருக்குடும்பம் இயேசு மரி சூசையோடு நாடுகடந்து சென்றது
இடம் பெயரும் குடும்பங்களுக்கு மாதிரியாக இருப்பதாகப் பேராயர் கூறினார் . அவர்கள் படும்
துயரங்களைப் பட்டியலிட்டுக்காட்டினார் . நாடுகளின் அரசியலாரும் , கிறிஸ்தவச் சமூகமும்
புலம் பெயர்ந்து வருவோர் குடிமக்களாக வாழ வழிசெய்ய வேண்டும் எனப் பேராயர் வலியுறுத்தினார்
. வேற்று நாடுகளுக்குப் படிக்கச் செல்வோர் , புலம்பெயர்வோர் , அகதிகளாக அடைக்கலம்த தேடுவோர்
ஆகியோருக்குப் பாதுகாப்புத் தேவை என்பதை திருத்தந்தையரின் சுற்றுமடல்களிலிருந்தும் மேற்கோள்காட்டி
, குடும்பங்கள் நிலைபெற தக்க பாதுகாப்புத் தர நாம் அனைவரும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்
பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ .