வருகின்ற ஞாயிறு தினத்தை அகில உலக புலம் பெயர்ந்தோர் தினமாகக் கொண்டாடுமாறு அறிவித்துள்ளது
வத்திக்கான் . குடியேற்றதாரர்களுக்கு எதிராக வெறுப்புணர்வையும் எதிர்ச்சார்புத் தன்மையும்
நற்செய்திப் படிப்பினைக்களுக்கு ஒவ்வாதது என வத்திக்கான் தெரிவித்துள்ளது . இதுபற்றிய
திருத்தந்தையின் கருத்துக்களை வெளியிட்டுக் கருத்து வழங்கிய இத்தாலிய ஆயர்குழுவின் குடியேற்றதாரர்களுக்கான
மன்றத்தின் தலைவர் ஆயர் போர்ட்டோலோ பெலோட்டி உலகில் 50 கோடிமக்கள் புலம் பெயர்ந்துள்ளதாகத்
தெரிவித்தார் . வளரும் நாடுகளிலில் இருந்து இத்தாலியில் பலர் குடியேறியுள்ளதாக ஆயர் மேலும்
தெரிவித்தார் . அவர்களை நேச உணர்வோடு கிறிஸ்தவர்கள் வரவேற்க வேண்டும் என குடியேற்றதாரர்களுக்கான
இத்தாலிதய ஆயர்குழுவின் தலைவர் பேராயர் பியர்ஜார்ஜியோ சாவியோலா கூறியுள்ளார் . பல கலாச்சாரங்களும்
, பல மொழிபேசுவோரும் , பல் வேறு இன மக்களும் ஒரே குடும்பமாக அன்புற்று வாழும் நிலை வரவேண்டும்
என மேலும் பேராயர் சாவியோலா கூறினார் .