காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தோனேசிய அனைத்து மதத்தினரும்
கண்டனம்
ஜன.14,2009. காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களை இந்தோனேசியாவின் அனைத்து
மதத்தினரும் வன்மையாகக் கண்டிப்பதாக இந்தோனேசியாவிலிருந்து வெளியான செய்திகள் கூறுகின்றன.
இந்தோனேசியாவின்
இளையோர் உட்பட சமயத் தலைவர்கள் இணைந்து நடத்திய கண்டனக் கூட்டத்தில், பெரும்பாலும் பெண்களும்
சிறாரும் பலியாகும் பாலஸ்தீனர் மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களைக் கண்டிப்பதாகக்
கூறினர்.
அதேசமயம் பாலஸ்தீனர், முழு பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்தை
அனுபவிக்கவும் அவர்கள் தங்களின் சொந்த விவகாரங்களைத் தாங்களே நிர்ணயிக்கும் வகையிலான
அங்கீகாரம் அளிக்கப்படவும் ஆவன செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.