தற்போதைய உலகளாவிய பொருளாதார பிரச்சனைக்குக் குடும்பங்கள் தீர்வாக அமைய முடியும் – திருப்பீட
அதிகாரி
ஜன.13,2009. தற்போதைய உலகளாவிய பொருளாதார பிரச்சனைக்குக் குடும்பங்கள் தீர்வாக அமைய முடியும்
என்று திருப்பீட செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
மெக்சிகோவில்
தொடங்கும் ஆறாவது உலக குடும்ப மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளச்
செல்லும் கர்தினால் பெர்த்தோனே, நிருபர்களுக்கு பேட்டியளித்த போது குடும்பங்களின் உரிமைகள்
அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.
உலகப் பொருளாதார பிரச்சனை மிகவும் மோசமாக உள்ளது,
இது குடும்பங்களை, குறிப்பாக ஏழைகளை மிகவும் பாதிக்கின்றது என்றுரைத்த கர்தினால், திருச்சபை
இது குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளது, திருத்தந்தையும் இது தொடர்பாக பல்வேறு செய்திகளை
வெளியிட்டுள்ளார் என்றும் கூறினார்.
ஆறாவது உலக குடும்ப மாநாடு வருகிற ஞாயிறன்று
நிறைவு பெறும்.