2009-01-13 14:57:35

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கத்தோலிக்கப் பங்குகளில் இடம் பெறும் திருட்டுக் குற்றங்களுக்கு அம்மாநில அதிகாரிகளும் ஒருவகையில் பொறுப்பு-ராஞ்சி பேராயர்


ஜன.13,2009. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கத்தோலிக்கப் பங்குகளில் இடம் பெறும் திருட்டுக் குற்றங்களுக்கு அம்மாநில அதிகாரிகளும் ஒருவகையில் பொறுப்பு என்று ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ குறை கூறினார்.

ராஞ்சி உயர் மறைமாவட்டத்தில் ஒதுக்குப் புறமான பங்கு ஒன்றில் ஜனவரி ஆறாம் தேதி ஆயுதம் தாங்கிய பத்து பேர் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புடைய பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். ஜனவரி 7ம் தேதி நவாட்டநர் பங்கில் இரு குருக்கள் திருடர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இடம் பெற்றுள்ள இன்னும் பல திருட்டுக் குற்றங்கள் விவகாரத்தை ஜார்க்கண்ட் மாநில அரசு கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்காவிடில் அது அம்மாநிலத்திற்கு பாதகமாக அமையும் என்று கர்தினால் டோப்போ எச்சரித்தார்







All the contents on this site are copyrighted ©.