சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார் கர்தினால் டயஸ். 0901.
சிறுபான்மையினரையும் வன்முறையால் தாக்கப்பட்ட மக்களையும் இந்திய அரசு பாதுகாக்க வேண்டும்
என்கிறார் வத்திக்கான் திருப்பீடத்தின் நற்செய்தி அறிவிப்பு ஆணையகத்தின் தலைவர் கர்தினால்
ஈவான் டயஸ் . இந்தியா உலகிலேயே மிகப்பெரிய புகழ்மிக்க குடியரசு . கர்நாடகத்திலும் ஒரிசாவிலும்
தாக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து இந்தியா நல்ல குடியாட்சியை நடத்துகின்றது
என்ற புகழைக் காக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் . கர்தினால் டயஸ் முந்நாள் மும்பைப்
பேராயராக இருந்தவர் . அவருடைய குருத்துவப் பொன்விழாவை அவர் உரோமையில் சென்றமாதம் 9 ஆம்
தேதி கொண்டாடினார் . தற்போது மும்பையில் பேராயராக உள்ள கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாசுடன்
சேர்ந்து இந்த மாதம் 8 ஆம் தேதி கர்தினால் டயஸ் தமது குருத்தவப் பொன்விழாவைக் கொண்டாடினார்
. விழாவில் பேசிய கர்தினால் கிராசியாஸ் மும்பையில் இருந்த 10 ஆண்டுகளில் மேதகு ஈவான்
டயஸ் ஆற்றிய அரும்பணிகளைப் பாராட்டினார் . கர்தினால் ஈவான் டயஸ் இந்தியக் கத்தோலிக்கத்
திருச்சபையின் எடுத்துக்காட்டான தொண்டுகளைப் பாராட்டி , இந்திய அரசு கிறிஸ்தவர்களுக்கும்
சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்புத் தருமாறு கேட்டுக்கொண்டார் .