கேரள அரசு கருணைச் சாவை சட்டமயமாக்க முயல்கிறது .090109 .
கேரள அரசு கருணைச் சாவை சட்டமயமாக்க முயல்வது தேர்தல் கால விளம்பரம் என்கின்றார் சத்யதீபம்
இதழ் ஆசிரியர் தந்தை பால் தெலக்காட் .
கேரளத்தில் மார்க்சிஸ்ட் சார்புடைய அரசு
ஆட்சி நடத்தி வருகிறது . கருணைச் சாவைச் சட்டப்படி சரியெனக் கூறி , தற்கொலைச் சாவை குற்றம்
அற்றதாக்க முயல்கிறது . இந்தச் சட்டம் நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெறவோ , வாழ்வை தம்
சொந்த விருப்பப்படி முடித்துக் கொள்ளவோ அனுமதி அளிக்கிறது . இதைக் கத்தோலிக்கத் திருச்சபை
உயிர்களைப் பறிப்பதற்குச் சட்டப்படி அனுமதி தருவதாகவும் எனக் கூறி எதிர்த்து வருகிறது
. முந்நாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் தலைமையில் கேரளத்தில் நடந்துவரும் சட்டத்
திருத்தக் குழுவின் முன் விசாரணைக்கு வந்துள்ளது இச்சட்டம் . வாழ்வு புனிதமானது என்றாலும்
தாங்கமுடியாத வேதனையின் போது வாழ்வுக்கு அர்த்தம் இல்லாது போய்விடுகிறது என மார்க்சிய
சார்பு கேரள ஆளும் கட்சி கூறியுள்ளது . இது தேர்தல் காலத்துத் தந்திரம் என்கிறார் தந்தை
தெலக்கட் .