ஒப்புரவு அருள் சாதனம் பற்றியத் திருப்பீடக் கருத்தரங்கு . 090109 .
பாவமன்னிப்பு ,ஒப்புரவு அருள் சாதனம் பற்றிய வத்திக்கான் திருப்பீட அமைப்பு இம்மாதம்
13 , 14 தேதிகளில் உரோமையில் கருத்தரங்கு நடத்துகிறது . வத்திக்கான் திருப்பீடத்தின்
ஆணையகங்களில் மிகப் பழமையானது என இது பெருமிதப்படுகிறது . ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றைக்
கொண்டது . திருச்சபையில் வழங்கி வரும் ஒப்புரவு அருள்சாதனம் பற்றி இந்தக் கருத்தரங்கில்
வல்லுநர்கள் கருத்துப் பரிமாற உள்ளனர் . பாவமன்னிப்பு வழங்கும் இந்த அருள்சாதனம் பற்றிய
விளக்கங்கள் ஆழமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது . வரலாற்றில் இது கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு
வழக்கத்தில் இருந்துவரும் நிலைமை , மற்றும் இதில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் , இதன்
அர்த்தமுள்ள பயன்கள் ஆகியனபற்றி இம்மன்றம் நல்ல கருத்துக்களைப் பரிமாறிப் பயன்தரும் என
எதிர்நோக்கப்படுகிறது . இதோடு தொடர்புடைய வத்திக்கான் திருப்பீட திருச்சபையின் விசுவாச
மன்றம் , வழிபாட்டு மன்றம் , குருக்கள் பற்றிய மன்றம் , மற்றும் கிறிஸ்தவ ஐக்கிய மன்றம்
ஆகிய ஆணையகங்களும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளன .