காஜா நிலைமை பற்றி வருத்தம் தெரிவிக்கிறார் வத்திக்கான் அதிகாரி . 080109 .
இஸ்ராயேலின் காஜா நடவடிக்கைகளை கண்டித்த வத்திக்கான் திருப்பீட நீதி அமைப்பின் தலைவர்
கர்தினால் ரெனாட்டோ மார்த்தீனோ காஜாப் பகுதி ஒரு
கிட்லர் காலத்தைய விஷவாயுச்
சிறைச்சாலையாக மாறிவருகிறது என வர்ணித்தார் . 12 நாட்களுக்கு முன்னர் தொடங்கிய காஜாப்
போரை வர்ணித்து வந்த வத்திக்கான், மிகவும் கடுமையாகக் கண்டிப்பது இதுவே முதல்தடவை எனச்
செய்தியாளர்கள் கூறுகிறார்கள் .போரிடும் இரு தரப்பும் தத்தமது லாபத்தையே நோக்குவதாகக்கூறிய
கர்தினால் ரெனாட்டோ , அப்பாவி மக்களைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்
. திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் காஜாப் போரை இதற்கு முன்னரும் , இன்று வத்திக்கானுக்கான
பல நாட்டுத் தூதர்களுக்கு உரை வழங்கியபோதும் கண்டித்துள்ளார் .