எங்கே நிம்மதி - மன நலமே உடல் நலம் – 07, ஜனவரி ,09 .
மனிதர்களாகிய நாம் சிறையில் மாட்டிக்கொண்டிருக்கும் தூய ஆவிகளோ , தேவதூதர்களோ அல்ல .
100 ரூபாய் பெறுமானமுள்ள உ.யர்ரக வேதிக்கலவையால் ஆனவெற்றுப் பொருளல்ல நாம் . நாம் நினைப்பது
போல அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல . உடல் , மனம் , ஆன்மா எனும் இம்மூன்றும் ஒருங்கிணைந்திருக்கும்
ஆச்சரியப்படத்தக்க பிரமாண்டமான ஒருமையே நாம் . நம் சிந்தனையையும் தேர்ந்தெடுத்தலையும்
நம் உடல் பாதிக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள நமக்குத் தயக்கமாய் இருக்கிறது . அதுபோல உடலின்மீதான
தங்களது திட்டங்களை மனமும் ஆன்மாவும் சேர்ந்து அதன்மேல் செயல்படுத்துகின்றன என்பதையும்
நாம் தெரிந்துகொள்ளவேண்டும் . உடல் மனம் ஆன்மாவின் ஒருமையையும் பிணைப்பையும் நாம் மறுக்கப்
பார்க்கிறோம் .
திரிக்கப்பட்ட மனமும் இழப்புக்குட்பட்ட ஆன்மாவும் நம்மை
உடல் நோயாளிகளாக்கலாம் என்பது ஒரு முக்கியமான உண்மை . ஒரு சிறிய தலைவலி நமக்கு ஏதோ மறுக்கப்பட்டதன்
கவலையினாலோ மனதில் ஊனமான எண்ணத்தின் விளைவாகவோ இருக்கலாம் என்ற சிந்தனை நம்மை சிரிக்கச்
செய்கிறது . ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது ஒரு உண்மை . மிக மென்மையாகப்
பிணைக்கப்பட்டிருக்கும் மூன்று பகுதிகளின் புரிந்துகொள்ள முடியா ஒருமைதான் நாம் . மனத்தின்மீதும்
ஆன்மாவின் மீதும் உடலின் தாக்கம் இருக்கிறது . மனம் உடலையும் ஆன்மாவையும் பாதிக்கிறது
.ஆன்மாவோ உடலையும் மனத்தையும் பாதிக்கிறது . எனவே நம் உடலைக் கவனிப்பது என்பது நம் மனத்தையும்
ஆன்மாவையும் மறைமுகமாய் கவனித்துக் கொள்வதாகும் .ஒரு முழுமையான மகிழ்ச்சியான வாழ்விற்கு
இப்படிப்பட்ட கவனிப்பு எப்போதும் அவசியமாகிறது .
நம் நோய்கள் முழுவதும் உடல் சம்பந்தப்பட்டவையல்ல
என்று மருத்துவர்கள் நமக்குச் சொல்கிறார்கள் . வேறு விதமாய் சொன்னால் நம்முடைய உடலில்
இருக்கும் வலி மனதால் தூண்டப்பட்டதே . மறுபக்கத்தில் வேதிப்பொருட்களின் சமநிலையின்மை
, அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறை இவற்றின் காரணமாகத்தான் மனச்சோர்வு உண்டாகிறது என்று
உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர் . இறையியல் வல்லுநர்கள் மனிதனுடைய துன்பங்களுக்குக்
காரணம் இறைவன் தரும் சோதனையல்ல . மாறாக மனிதனாய் இருப்பது என்றால் என்னவென்று தெரியாததாலும்
தவறாய் புரிந்துகொண்டதாலும் ஏற்படுவதே என்று கூறுகின்றனர் . நம் ஆன்மீக வழிகாட்டிகளோ
நம் சிறுவயதில் நாம் பதிப்பித்துக்கொண்ட அந்தத் திட்டங்களையும் பதிவுகளையும் நோக்கிப்
போகவேண்டி இருக்கிறது . நம் ஆன்மீகப் பிரச்சனைகளுக்கு மூலகாரணம் ஒருவேளை இந்தச் சிறுவயதுப்
பதிவுகளில் இருக்கலாம் .
உடல் மனம் ஆன்மா இவற்றுக்கிடையேயான பிணைப்பானது , இப்பகுதிகளில்
ஏதாவதொன்றில் ஒரு பிரச்சனை என்றால் அது மற்ற பகுதியிலும் தெரியவர வாய்ப்பாகிறது . ஒரு
தவறான பார்வை தலைவலியை உண்டாக்கலாம் . சத்தற்ற உடல்நிலை மனச்சோர்வுக்குக் காரணமாக இருக்கலாம்
. மனித ஆன்மாவில் நிறைவு செய்யப்படாத பசிகள் நம் உடலிலும் மனத்திலும் உள்ள நோய்களில்
வெளிப்படலாம் .
நாம் நிம்மதியாக இருக்க இம்மூன்று பகுதிகளும் கவனிக்கப்பட
வேண்டும் . இம்மூன்றின் தேவைகளும் நிறைவு செய்யப்பட்டால் ஒழிய யாராலும் உண்மையாகவே நிம்மதியாக
இருக்கமுடியாது . தேவையான ஓய்வு , பயிற்சி , சத்தான உணவு இவற்றோடு நம் உடலில் முக்கியப்
பகுதிகளாக இருக்கும் மனம் ஆன்மா இவற்றின் நலமும் இணைந்து நமக்கு ஆரோக்கியமான வாழ்வைத்
தரும் . ஆரோக்கியமாக வாழ்வதே நிம்மதிக்கு வழியாகும் .