இலங்கையின் தேவாட்டாவில் அன்னை மரியாவின் ஆசி . 060109
தம் குழந்தைகளுக்கும் தமக்கும் அன்னை மரியாவின் ஆசிபெற மக்கள் வருவதாகக் கூறுகிறார் கொழும்பின்
பேராயர் கோமிஸ் . இலங்கையில் உள்ள தேவாட்டாவில் உள்ள அன்னை மரியாவின் தேசியத் திருத்தலத்தில்
ஆண்டின் தொடக்கத்தில் கத்தோலிக்கரும் புத்தசமயத்தவரும் அன்னையின் ஆசிபெற வருவது வழக்கம்.
மாறுபட்ட இன்றைய உலகச் சூழலில் குழந்தைகளுக்கு என்ன வரம் கேட்க வந்துள்ளீர்கள் என மக்களைக்
கேட்டார் கொழும்பின் பேராயர் ஆஸ்வால்டு கோமிஸ் . ஆன்மீக , கல்வி , பொருளாதார வரங்களா
என வினவினார் . தேவமாதாவின் தேவாட்டாத் திருத்தலம் கொழும்பிலிருந்து 20 கல் தொலைவில்
உள்ளது . எல்லாச் சமயத்தவரும் தங்கள் தொழிலுக்காகவும் , எந்திரங்களுக்காகவும் , வாகனங்களுக்காகவும்
, ஆண்டின் தொடக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்னையின் சிறப்புத் திருப்பலிக்கு அங்கு
வந்திருந்தனர் . அங்குள்ள பேராலயத்தில் சேவைபுரியும் வெந்நப்புவா பங்கின் ஒருங்கிணைப்பாளர்கள்
அவர்களின் திருத்தலச்சேவையின் 25 ஆம் ஆண்டைக் கொண்டாடினர் .