மெக்சிகோ குடும்ப மாநாட்டில் கலந்து கொள்வதற்கு திருத்தந்தை தமது பிரதிநிதியாக திருப்பீடச்
செயலரை நியமித்துள்ளார்
ஜன.03,2009. மெக்சிகோ நாட்டு மெக்சிகோ நகரில் ஜனவரி 13 முதல் 18 வரை நடைபெறவுள்ள ஆறாவது
சர்வதேச குடும்ப மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்குத் தமது பிரதிநிதியாகத் திருப்பீடச்
செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனையை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்நியமனம்
குறித்து கர்தினால் பெர்த்தோனைக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள கடிதத்தில், கர்தினால்
பெர்த்தோனையின் தலைமையில் குவாதாலூப்பே புனித மரியா ஸ்பானிய குருத்துவ கல்லூரியின் ஆன்மீக
இயக்குனர் அருள்தந்தை ரோஹெகியோ அல்காந்த்ரா மென்டோசா, குவாதாலூப்பே மாதா பசிலிக்கா இசைக்குழுவின்
ஆன்மீகக் குரு மார்ட்டின் முனோஸ் லோப்பேஸ் ஆக்யோரும் செல்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.