2009-01-03 15:49:07

காஸா பகுதியில் இடம் பெற்று வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கின் அமைதிக்கும் நிலையான தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன - ஐ.நா. அதிகாரி


ஜன.03,2009. காஸா பகுதியில் இடம் பெற்று வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கின் அமைதிக்கும் நிலையான தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

காஸா பகுதியில் ஏழாவது நாளாகத் தொடர்ந்து இடம் பெறும் இஸ்ரேலின் குண்டு வீச்சு தாக்குதல்களில் நானுறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் காஸாவில் ஏற்கனவே பதினைந்து இலட்சம் பேர் கடும் உணவு, எரிபொருள் மற்றும் சமையல் வாயு பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலின் தற்போதைய குண்டு வீச்சு தாக்குதல்கள் காஸாவில் மனிதாபிமான நெருக்கடிகளை மேலும் மோசமாக்கியுள்ளன என்று உலக உணவு திட்ட அமைப்பு கூறியது.








All the contents on this site are copyrighted ©.