சிட்னியில் நடந்த இளைஞர் மாநாடு மதமாற்றத்தையும் இறைப்பணித் தொண்டர்களையும் ஊக்குவித்துள்ளதாக
சிட்னிப் பேராயர் கர்தினால் ஜார்ஜ் பெல் தெரிவிக்கிறார் . சென்ற ஆண்டு ஜூலை மாதம் சிட்னியில்
அகில உலக இளைஞர் மாநாடு நடந்தது . அதன் பயனாக குருமாணவராகப் பணிசெய்வதற்குப் பலர் விண்ணப்பித்துள்ளதாகக்
கர்தினால் பெல் தெரிவித்துள்ளார் . ஒரு பங்குத் தலத்திலிருந்து 25 பேர் கத்தோலிக்கத்
திருச்சபைக்கு மதம் மாறிவந்துள்ளதாகவும் தெரிவித்தார் . பலர் ஆன்மீகத் தியானங்கள் செய்வதாகவும்
திருச்சபையின் வழிபாடுகளில் அதிக அளவாகப் பங்கேற்பதாகவும் தெரிவித்தார் கர்தினால் பெல்
. ஆஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களுக்கு இளைஞர் மாநாட்டுக்குப் பிறகு ஆன்மீக வாழ்வுக்காக
அதிகக் கவனம் செலுத்தப்படுவதாகவும் கர்தினால் பெல் தெரிவித்துள்ளார் .