ஒன்றுபட்டு பகிர்ந்து வாழ்வோம் என்கிறார் மணிலாவின் கர்தினால். 31, டிசம்பர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் கர்தினால் கெளதென்சியோ ரோசாலஸ் அந்நாட்டின்
இறைமக்களை உலகப் பொருளாதார வீழ்ச்சியால் அவதியுறும் மக்களுக்கு தாராள மனத்தோடு பகிர்ந்து
வாழ அழைப்பு விடுத்துள்ளார் . இத்திங்களன்று கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டத்தின்போது
200 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள் . ஆயர்கள் , பொது நிலை மக்கள் , துறவியர் ,
குருமாணவர்கள் , கலந்து சிறப்பித்தார்கள் . அதுபோது கர்தினால் ரோசாலஸ் மேல் நாட்டின்
பொருளாதாரப்பின்னடைவு 2009 ஆம் ஆண்டில் மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதால் செபிக்குமாறு
கேட்டுக்கொண்டார் . பிலிப்பைன்ஸ் நாடு மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது . இத்தருணத்தில்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலத்திருச்சபை சகோதரப் பாசத்தோடும் பிறரன்புச் சேவையுணர்வோடும்
தேவைப்படுவோரோடு பகிர்ந்து வாழ்ந்து எடுத்துக்காட்டாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
.