2008-12-31 20:52:02

உலக அமைதி தினம் – ஒரு கண்ணோட்டம் . 31 , டிசம்பர் .


இப்புத்தாண்டு தினத்தில் திருச்சபை 42 ஆவது உலக அமைதி தினத்தைக் கொண்டாடுகிறது . முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் உலகில் நல்லெண்ணம் கொண்ட அனைவரையும் ஜனவரி முதல் நாள் , 1968 இல் உலக அமைதி தினமாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார் . அதுவே முதலாவது உலக அமைதி தினமாகக் கொண்டாடப்பட்ட நாளாகும் . இதை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடிச் சிறப்பிக்க கேட்டுக்கொண்ட திருத்தந்தை அமைதியின் கனிகளை வரவிருக்கும் மனித முயற்சிகளும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளட்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் . திருச்சபையின் மறைக்கல்வி நூல் அதனுடைய 5 ஆவது கட்டளையில் அமைதி பற்றியும் நீதியான போர் பற்றியும் சிந்திக்கிறது . 1914 ஆம் ஆண்டிலிருந்து 1968 ஆம் ஆண்டுவரையில் 5 திருத்தந்தையர் 21 சுற்றுமடல்களை அமைதி பற்றி வெளியிட்டுள்ளனர் . 1968 லிருந்து அமைதி பற்றி திருத்தந்தையர் ஜனவரி முதல் நாளில் கருத்து வெளியிடுவது வழக்கமாக உள்ளது .








All the contents on this site are copyrighted ©.