2008-12-30 15:16:28

கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரி - உகாண்டா எல்.ஆர்.எ புரட்சிக்குழு, காங்கோ அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றது


டிச.30,2008. காங்கோ ஜனநாயகக் குடியரசின் இராணுவத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் உகாண்டா நாட்டு எல்.ஆர்.எ புரட்சிக்குழு, காங்கோ நாட்டு அப்பாவி மக்களைக் கொன்று வருவதாகக் கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரி ஒருவர் கூறினார்.

இவ்வன்முறைக்கு அப்பாவி மக்கள் பலியாகின்றனர் என்று காங்கோ ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் செயல்திட்ட செயலர் அருட்சகோதரி பெர்நார்டு அலிமா கூறினார்.

கிறிஸ்துமஸ் நாள் காலையில் தொருமா கத்தோலிக்க ஆலய வளாகத்தில் ஐம்பது சடலங்கள் கிடந்தன எனவும் அவர் கூறினார்







All the contents on this site are copyrighted ©.