2008-12-30 20:45:08

இஸ்ராயேல் நாட்டுக்கான வத்திக்கான் தூதரின் வேண்டுகோள் . 30, டிசம்பர்.


பேராயர் அந்தோனியோ பிராங்கோ இஸ்ராயேல் மற்றும் சைப்ரஸ் நாட்டுக்கான வத்திக்கான் தூதராக இருக்கிறார் . அவர் அகில உலக சமுதாயமும் பார்வையாளர்களாக இல்லாமல் இஸ்ராயேல் மற்றும் காஜா முன்பு தொடர்ந்த சமாதானப்பேச்சுத் தொடர உதவிடுமாறு வேண்டுயுள்ளார் . அகில உலக காரித்தாஸ் உடனடியாக அங்கு போர் நிறுத்தம் தேவை எனக் கூறியுள்ளது . காரித்தாஸின் தொண்டுகள் இஸ்ராயேலின் குண்டு வீச்சுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக காரித்தாஸின் எருசலேம் செயல்திட்டத் தலைவர் கிளாதேத்தே ஹாபெஷ் கூறியுள்ளார் . இஸ்ராயேல் அதனுடைய எல்லைகளை மூடிவிட்டதால் உணவு , மருந்து , மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்ல இயலவில்லை என அவர் தெரிவித்துள்ளார்







All the contents on this site are copyrighted ©.