டிச.27,2008. உலகின் கத்தோலிக்கருக்குத் தலைவரான திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மற்றும்
இயேசு கிறிஸ்துவைப் பின்செல்லுகிறவர்கள் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லியுள்ளார் ஈரான்
அரசுத்தலைவர் மகமுத்அஹ்மத்நெஜாட்.
கனிவு, அமைதி நட்பு ஆகியவற்றின் தூதுவராகிய
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவன்று திருத்தந்தையாகிய உம்மையும், இரக்கம் நிறைந்த இறைவனின்
பெயரால் வாழ்த்துவதாகத் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார் ஈரான் அரசுத்தலைவர்.
அதோடு
கிரகோரியன் புத்தாண்டுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், போர், இரத்த்ம் சிந்துதல்,
பதட்டம், பாகுபாடு, ஏமாற்றம் போன்றவற்றால் சோர்ந்து போயுள்ள இன்றைய மனித சமுதாயம் இறைவன்
பக்கம் திரும்பி இறைத்தூதர்களின் போதனைகளை கேட்டலொழிய அதன் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது
என்றும் உரைக்கின்றது.
மனிதர் கடவுள் அருளால் நிரப்பப்படுவார்கள் மற்றும் அழகான
உலகம் உருவாக்கப்படும் என்ற தனது நமபிக்கையையும் ஈரான் அரசுத்தலைவர் கூறியுள்ளார்