தூய ஆவியானவர் தரும் வியப்பூட்டும் கொடைகள் . 24 , டிசம்பர் .
கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னர் வத்திக்கான் திருப்பீட உறுப்பினர்களுக்கு திருத்தந்தை
வழங்கிய உரையில் தூய ஆவியானவரின் அதிசயமான செயல்பாடுகள் குறித்து திருத்தந்தை கருத்தைப்பகிர்ந்து
கொண்டார் . உலக இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் இளைகளுக்கு மகிழ்ச்சியும் எழுச்சியும் ஊட்டியதாகத்
திருத்தந்தை கூறினார் . புதிய நம்பிக்கைகளையும் , அன்புறும் வாழ்வையும் இளைஞர்கள் தம்மோடு
கொண்டு சென்றதாகத் திருத்தந்தை கூறினார் . உலகம் ஆண்டவர் அருளால் நிரம்பியுள்ளது . வியத்தகு
விந்தைகளை அறிவியல் உலகம் கண்டுபிடித்து வருகிறது எனவும் தெரிவித்தார் திருத்தந்தை .
உலகம்
உருவாக்கப்பட்டபோது ஆதாமும் ஏவாளும் கண்ட மகிழ்ச்சி இன்று பல்வேறு குழப்பங்களால் திசை
திரும்புவதாகவும் அவர் உரைத்தார் . இறைமகன் இயேசு நம்மிடையே வந்து தங்கி நம்மில் ஒருவராக
வாழ்ந்தது மிகப் பெரிய அதிசயம் . இன்றும் விசுவாசிகள் மத்தியில் இயேசு வாழ்கிறார் . எனவே
கிறிஸ்துமஸ் விழா கடவுள் தரும் அதிசயங்களை நினைவில் நிறுத்தும் திருவிழா. திருச்சபை இதை
உலகுக்குப் பறைசாற்ற விழைகிறது என்றும் திருத்தந்தை கூறியதை, திருப்பீட செய்தித் தொடர்பாளர்
தந்தை பெடரிக்கோ லொம்பார்டி தமது கருத்துரையில் சுருக்கமாகத் தெரிவித்துள்ளார் .