இளையோர் மத்தியில் நம்பிக்கையின் அடையாளங்கள் தெரிகின்றன – அயர்லாந்து பிதாப்பிதா
டிச.23,2008. இளையோர் தங்களது தாராள உள்ளம் மற்றும் எதிர்காலம் பற்றிய நேர்மறையான அணுகுமுறை
மூலம் கஷ்டமான சூழலை மாற்ற முடியும் என்று அயர்லாந்து பிதாப்பிதா கர்தினால் ஜான் பிராடி
தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார்.
பெத்லகேமில் காணப்படும் இன்னல் நிறைந்த
சூழல்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் அடையாளங்கள், குறிப்பாக இளையோரடையே தெரிகின்றன
என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஒருநாள் ஒன்றிணைந்து
நீதி மற்றும் அமைதியான வழியில் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இளையோரிடையே தெரிவதாகவும்
அயர்லாந்து பிதாப்பிதா கூறியுள்ளார்.
இன்றைய பொருளாதார நெருக்கடி சூழலில் எதிர்காலம்
பற்றி நம்பிக்கை இழக்காதிருப்பதற்கு குழந்தை இயேசு நம்மைத் தூண்டுகிறார் என்று மேலும்
அச்செய்தி கூறுகிறது.