2008-12-23 20:46:51

இளைஞர்களும் திருச்சபையும் பற்றி வத்திக்கான் அதிகாரி . 23 , டிசம்பர் .


இளைஞர்கள் திருச்சபையின் வாழ்வில் ஈடுபாடுகொள்ள கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என வத்திக்கான் அதிகாரி தெரிவித்தார். அடிப்படைக் கொள்கைகளின் மையக் கருத்துக்களை சரியான முறையில் வழங்க வேண்டும் என வத்திக்கானின் விசுவாசக் கோட்பாடுகளுக்கான அமைப்பின் துணைச் செயலர் அருள் தந்தை அகுஸ்தின் டிநோயா கருத்து வெளியிட்டார் . இன்றைய உலகப் போக்குகளின் பாதையில் அவர்களை விட்டுவிடாமல் இன்றைய கலாச்சாரத்தில் காணப்படும் தடைகளை துணிவோடு சந்திக்க அவர்களுக்கு நாம் கற்றுத்தரவேண்டும் எனத் தந்தை டிநோயா தெரிவித்தார் . மீட்பரைப் பற்றிய செய்தியைப் பரப்புவதற்குள்ள தடைகளையும் எதிர்கொள்ளத் தெரிந்துகொள்ள வேண்டும் எனக்கூறினார் அவர். கிறிஸ்துவைப் பற்றிய முழுமையான , உண்மையான அழகான நற்செய்தியை நாம் அறிவிக்கும்போது அது வயப்படுத்தும் தன்மை கொண்டது என்றும் தந்தை அகுஸ்தின் டிநோயா தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.