திருத்தந்தை - மூவேளை செபத்தை செபிக்கும் பொழுது மரியா ஆகட்டும் என்று சொன்ன நிகழ்வை
மீண்டும் வாழ்வதாக இருக்கின்றது
டிச.22,2008. ஒருவர் மூவேளை செபத்தை செபிக்கும் பொழுது மரியா ஆகட்டும் என்று சொன்ன நிகழ்வை
மீண்டும் வாழ்வதாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஞாயிறு
நண்பகல் மூவேளை செப உரையில் இவ்வாறு உரைத்த அவர், இஞ்ஞாயிறு நற்செய்தி, லூக்கா விவரித்துள்ள
மரியாவுக்கு கிறிஸ்து பிறப்பு செய்தி அறிவிக்கப்பட்ட நிகழவாகும், இந்தப் பேருண்மையை நாம்
ஒவ்வொரு நாளும் மூவேளை செபத்தை செபிக்கும் பொழுது நினைவுகூருகிறோம் என்றார்.
இறைவார்த்தை
மரியாளில் மற்றும் அவரிடமிருந்து மனித உரு எடுப்பதற்கு கடவுள் மரியாவின் இதயத்தைத் தட்டி
ஆகட்டும் என்ற அவரது சம்மதத்தைப் பெற்ற அந்த நேரத்தை மீண்டும் வாழ்வதற்கு இச்செபம் நமக்கு
உதவுகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் வேளை, கடவுள்
மனிதனான பேருண்மையை, கன்னிமரியா தனது உதரத்தில் ஒன்பது மாதங்கள் தாங்கிய அந்த அறிவுக்கெட்டாத
பேருண்மையை விசுவாசிகள் தியானிக்குமாறும் திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.