2008-12-20 15:58:41

ருவாண்டாவில் ஒப்புரவு மற்றும் ஜனநாயகத்திற்கான பாதைகள் திறக்கப்படுமாறு நைஜீரிய ஆயர்கள் அழைப்பு


டிச.20,2008. ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் ஒப்புரவு மற்றும் ஜனநாயகத்திற்கான பாதைகள் திறக்கப்படுமாறு நைஜீரிய ஆயர்கள் அழைப்பு விடுத்தனர்.

ருவாண்டாவைப் பார்வையிட்ட பின்னர் அறிக்கை வெளியிட்ட நைஜீரிய ஆயர்கள் பிரதிநிதிகள் குழு, இராணுவம், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் ஒரே குழு நடத்துவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்று கூறியது.

பேச்சு சுதந்திரம், மனச்சான்றின் சுதந்திரம், கழகங்கள், இயக்கங்கள் அமைக்கச் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தேசிய ஐக்கியத்திற்கும் ஒப்புரவுக்கும் ஊக்கமுடன் செயல்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கை மேலும் கூறியது.

மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்புவதில் ருவாண்டா திருச்சபையின் பொறுப்பையும் நைஜீரிய ஆயர்கள் சுட்டிக்காட்டினர்.








All the contents on this site are copyrighted ©.