கொரியாவின் மருத்துவர்கள் கருணைச் சாவுக்கு எதிர்ப்பு .19, டிசம்பர் .
கொரியா நாட்டின் செவரன்ஸ் மருத்துவ மனையை கிறிஸ்தவ புரோட்டஸ்டண்ட் சபையினர் நடத்திவருகின்றனர்
. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் மயக்க நிலையில் இருந்து வருகிறார்
. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவச் சிகிச்சைகளை நிறுத்திக் கொள்ள கீழ் நீதி
மன்றத்தில் உத்தரவு கேட்டிருந்தனர் . உத்தரவும் தரப்பட்டுள்ளது . இன்னும் 3 அல்லது 4
மாதங்களில் இறந்துவிடும் நிலையில் அப்பெண்மணி இருப்பதால் சிகிச்சைகளை நிறுத்திவிடுமாறு
மருத்துவ மனைக்கு நீதி மன்றம் அறிவுறுத்தியிருக்கிறது . ஆனால் அந்த மருத்துவ மனையின்
மருத்துவர்கள் இதற்கு உடன்பட மறுத்து மேல் நீதி மன்றத்துக்கு மனு செய்ய உள்ளதாகச் செய்திகள்
தெரிவிக்கின்றன .