வத்திக்கான் தொலைக்காட்சி வெள்ளி விழாக் கொண்டாடுகிறது. 18-12- 08 .
வத்திக்கான் திருப்பீடத்தின் தொலைக்காட்சி மையத்தின் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை
திருத்தந்தை இவ்வியாழன் காலை வரவேற்றுப் பேசினார் . வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின்
25 ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது அவர்களை வரவேற்றுப் பேசுவது தமக்கு மகிழ்ச்சி
தருவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . சந்திப்பின் தொடக்கத்தில் தொலைக்காட்சி
மையம் பற்றி விளக்க உரை வழங்கிய கர்தினால் ஜான் பி . பாலி மற்றும் அருள்தந்தை பெடரிக்கோ
லொம்பார்டிக்கு திருத்தந்தை நன்றி கூறினார் . இதற்கு முன்னர் நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பேற்றுத்
திறம்பட நடத்திய முனைவர் திரு எமிலியோ ரோசிக்கும் திருத்தந்தை தமது நன்றிகளைத் தெரிவித்தார்
. திருத்தந்தையின் சேவைகள் திருச்சபைக்கும் உலகுக்கும் கிடைக்கும் வண்ணம் தொலைக்காட்சியை
முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் தொடங்கியதாகத் திருத்தந்தை தெரிவித்தார் . இம்மையம்
1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
திருத்தந்தையை காண்பதற்காகவே திருப்பயணிகள் உரோமைக்கு
வருவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை . இதனை நிறைவேற்ற வத்திக்கான் வானொலி வழியாக முன்னர்
திருத்தந்தையின் குரலையும், இப்பொழுது தொலைக்காட்சி வழியாக திருத்தந்தையைக் காணவும் வாய்ப்பிருப்பதாகத்
தெரிவித்தார் அவர் . உலகின் பல தொலைக்காட்சி நிலையங்கள் வத்திக்கான் தொலைக்காட்சி நிலையத்தோடு
தொடர்பு கொண்டு வத்திக்கான் செய்திகளை விநியோகம் செய்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை
.
எனவே வந்திருந்தோர் மிகப் பெரிய பணியை ஆற்றுவதாகக் கூறி வத்திக்கான் தொலைக்காட்சித்
துறையில் உற்காசமாகப் பணி செய்யுமாறு ஊக்குவித்து தம் உள்ளார்ந்த நன்றிகளையும் , கிறிஸ்துமஸ்
நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து தமது ஆசியை வழங்கினார் திருத்தந்தை .