இவ்வாரம் வியாழன் 18 டிசம்பர் காலையில் திருத்தந்தை வத்திக்கானுக்கான பல்வேறு நாட்டு
அரசுத்தூதர்களை வரவேற்று அவர்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டார் . மாலவி , சியரா
லியோன் , ஐஸ்லாண்ட் , லக்சம்பர்க் , மடகாஸ்கர் , பெலிட்சே , டூனிசியா , கசகஸ்தான் , பக்ரெய்ன்
, பிஜித் தீவுகள் , மற்றும் ஸ்வீடன் ஆகிய 11 நாடுகளின் தூதர்களை வரவேற்று , அவர்களைச்
சந்திப்பதில் மகிழ்ச்சி எனக்கூறி அவர்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார் . அவர்களைத்
தனித்தனியே சந்தித்துப் பேசிய திருத்தந்தை அந்தத் தூதர்களுக்கும் , அவர்கள் நாட்டுத்
தலைவர்களுக்கும் , அவர்கள் நாட்டு மக்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து மன்றாட்டுக்களைக்
காணிக்கையாக்கினார் .