டிச.15-17 முஸ்லீம்-கத்தோலிக்க ஆண்டுக் கூட்டம் வத்திக்கானில் நடை பெற்று வருகிறது
டிச.16,2008. திருப்பீட பல்சமய உரையாடல் அவைக்கும், லிபியாவின் டிரிபோலியை மையமாகக் கொண்ட
உலக இசுலாமிய அழைப்பு கழகத்துக்கும் இடையேயான 11வது கலந்துரையாடல் வத்திக்கானில் நடைபெற்று
வருகின்றன.
மூன்று நாள் நடைபெறும் இதில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர்
கரிதினால் ஜான் லூயி தவ்ரான், அவ்வவையின் செயலர் பேராயர் பியர் லூயிஜி செலாத்தா உட்பட
12 கத்தோலிக்கப் பிரமுகர்களும் 12 இசுலாமிய வல்லுனர்களும் கலந்து கொள்கின்றனர்.
சமயப்
பொறுப்புணர்வு, கலாச்சார-சமூக பொறுப்புணர்வுகள், பல்சமய உரையாடல் பாதையில் எதிர் கொள்ளும்
பிரச்சனைகள் போன்ற தலைப்புகள் இதில் விவாதிக்கப்படுகின்றன. இக்கூட்டத்தின் நிறைவு நாளான
நாளை இவர்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்டையும் சந்திப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.