கிறிஸ்துமஸ் அமைதியின், மீட்பின் நற்செய்தி - கர்தினால் பெர்த்தோனே
டிச.16,2008. கிறிஸ்துமஸ் என்பது, கிறிஸ்தவர்க்கு கடவுளின் மகனான இயேசு கிறிஸ்து கன்னிமரியிடம்
மனிதனாகப் பிறந்த மீட்பின் மைய நிகழ்வை நினைவுகூர்வதாகும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால்
தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
உரோமை குழந்தை இயேசு மருத்துவமனையை இன்று பார்வையிட்டு
திருத்தந்தையின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட கர்தினால், கிறிஸ்து பிரிவினைச்
சுவர்களை உடைத்து தோழமையைக் கட்டி எழுப்ப மனிதனாகப் பிறந்தார் என்றார்.
கிறிஸ்துமஸ்
ஒரு நற்செய்தி, வானதூதர்கள் இடையர்களுக்கு அறிவித்த அமைதியின், மீட்பின் நற்செய்தி என்றும்
அவர் விளக்கினார்.
கிறிஸ்துமஸ் ஆண்டவரால் அன்பு செய்யப்படும் மனிதருக்கு அமைதியைத்
தருகிறது, நாம் ஆண்டவரால் அன்பு செய்யப்படுகிறோம், அன்புக் கடவுள் நம்மில் அமைதியை அருளுகிறார்,
நாம் அமைதியின் கருவிகளாகச் செயல்படவும் தூண்டுகின்றார் என்றும் கர்தினால் கூறினார்