2008-12-15 15:48:24

வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்க திருத்தந்தை அழைப்பு


டிச.15,2008. இயேசுவை எப்பொழுதும் மகிழ்ச்சியோடு வரவேற்பதற்கும் அவர் கேட்பதை எப்பொழுதும் செய்வதற்கும் நமது அன்பு தேவைப்படுகிறவர்களில் அவரைக் காணவும் நமது இதயங்களைத் திறப்போம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருத்தந்தையின் ஆசீர் பெறுவதற்காக தங்களது பாலன் இயேசு திருவுருவத்தைக் கொண்டு வந்த சிறாரை ஆசீர்வதித்து அவர்களோடு சேர்ந்து செபித்த திருத்தந்தை, இயேசுவே இத்திருவுருவம், உமது அன்பு மற்றும் பிரசன்னத்தின் அடையாளமாக இருக்கின்றது, நீர் எங்கள் மத்தியில் எங்கள் வீடுகளில் குடிகொள்ளும் என்று இறைஞ்சினார்.

கிறிஸ்துமஸ் குடில்கள் எங்கள் அமைக்கப்படுமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

இன்னும், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களை நிகழ்த்துவதற்கு ஆலயங்கள் இல்லாத பங்குகளில் அவை கட்டப்படுவதற்கு விசுவாசிகள் தாராளமாக உதவுமாறும் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

உரோம் மறைமாவட்டம் புதிய ஆலயங்கள் கட்டும் நாளை ஞாயிறன்று சிறப்பித்ததை முன்னிட்டு இந்த அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, உரோமையில் அண்மை ஆண்டுகளில் புதிய பங்குகள் உருவாகியுள்ளன, ஆனால் அவைகளுக்குப் போதுமான கட்டிடங்கள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.