இயேசு, ' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு
புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச்
சென்று வேலை செய் ' என்றார். அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால்
பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே
சொன்னார். அவர் மறுமொழியாக, 'நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை.1 இவ்விருவருள்
எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று
விடையளித்தனர்.
அன்பர்களே, நாம் என்ன முரண்பாடுகளின் மூட்டையா? பெரும்பாலும்
நாம் சொல்வது ஒன்று. செய்வது வேறொன்றாக இருக்கின்றது. நல்லது செய்ய ஆசையிருக்கின்றது.
ஆனால் செய்வதோ அதற்கு மாறாய்ப் போய் விடுகின்றது. மனிதர் முன் நல்லவராய் பெயரெடுப்பது
முக்கியமல்ல, நம்மைப் படைத்த கடவுள்முன் நல்லவராய் பெயரெடுப்பதே மிக மிக முக்கியம். எனவே
நமது சொல்லும் செயலும் முரண்பாடுகள் இன்றி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். நம் இயேசு
தாம் போதித்ததை வாழ்ந்தார். வாழ்ந்ததைப் போதித்தார்